இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் உறவு புத்துயிராகுமா – முயற்சியில் ஜாகீர் அப்பாஸ்

இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் உறவு புத்துயிராகுமா – முயற்சியில் ஜாகீர் அப்பாஸ்

இந்தியா- பாகிஸ்தான் இடையே மீண்டும் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதற்கு உதவி செய்வதற்கு தயாராக இருப்பதாக தற்போது ஐ.சி.சி. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாகீர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறுகையில், ‘‘கிரிக்கெட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். எனது பதவிக்காலமான அடுத்த ஓராண்டில் கிரிக்கெட்டுக்கு என்னுடைய பங்களிப்பை அளிக்க விரும்புகிறேன். இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மீண்டும் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதற்கு உதவி செய்வதில் நான் முக்கிய நபராக இருக்க விரும்புகிறேன். ஏனென்றால் இரண்டு நாட்டின் ரசிகர்களும் தங்கள் நாடுகளில் போட்டிகள் நடைபெற விரும்புகிறார்கள். இரு அணிகளுக்கும் இடையே தொடர்ந்து கிரிக்கெட் தொடர்கள் நடைபெறுவது முக்கிய தேவையாகும்.

எனினும், இரு அணிகளுக்கும் இடையே மீண்டும் விளையாட்டு நடைபெறுவது எளிதான வேலையில்லை என்பது எனக்குத் தெரியும். இது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் சம்பந்தமான பிரச்சினை. இருந்தாலும், இருநாட்டு வீரர்கள் மற்றும் மக்களுக்கு இது நல்லது என்பதால் நான் அந்த கோணத்தில் செயல்பட  இருக்கிறேன்’’ என்றார்.