இந்தோனேஷியாவின் இராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 30 பேர் பலி

இந்தோனேஷியாவின் இராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 30 பேர் பலி

இந்தோனேஷியா ராணுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று சுமாத்ரா தீவு அருகே விபத்துக்குள்ளானதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து பற்றி மீட்புப்படையை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும் போது “ஹெர்குலஸ் சி 130 என்ற விமானம் சுமத்ரா அருகே உள்ள மேடன் நகர குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. கடைசியாக கிடைத்த தகவலின் படி 30 பேர் பலியாகிவிட்டதாக தெரியவந்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்” என தெரிவித்துள்ளார். மேலும் விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள் என்று சரியான தகவல் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,விமானம் மேடனில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து நாடுனா தீவுகளுக்கு புறப்பட சில நிமிடங்களுக்கு பிறகு கீழே விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது.