பளிச்சென்று மாற நீங்கள் செய்ய வேண்டிய உடனடி அழகுக் குறிப்புகள்!

பளிச்சென்று மாற நீங்கள் செய்ய வேண்டிய உடனடி அழகுக் குறிப்புகள்!

இவை எல்லாமே இயற்கையான முறையில் கொடுக்கப்படும் தீர்வுகள் தான் . அதனால் பக்க விளைவுகளின்பற்றிய கவலை வேண்டாம்.

கண்கள் சோர்வை நீக்க:
கோபி டீ பேக் , க்ரீன் டீ பேக் இவற்றில் ஏதாவது ஒரு டீ பேக்கை 2 எடுத்துக் கொள்ளவேண்டும். இதனை நன்றாக கொதிக்கும் நீரில் 1 நிமிடம் வரை போட்டு பின்பு அதனை எடுத்து சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்த பின் நன்றாக குளிர்ந்த டீ பேக்கை எடுத்து மூடிய கண்களின் மேல் வைக்கவும். இதனை 5-15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பிறகு கண்களை குளிர்ந்த நீரால் கழுவவும். உங்கள் கண்கள் புத்துணர்ச்சி அடையும்.

பளிச்சென்ற உதடுகள் பெற:
1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை அடுப்பில் வைத்து இலேசாக சூடாக்கவும். பின்பு அடுப்பில் இருந்து எடுத்து அதில் 4 கனிந்த ரோஸ்பெர்ரி பழங்களை போடவும். நன்றாக கூழாகும் வரை மசிக்கவும். சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்ந்தவுடன், சுத்தமான விரல்களால் உங்கள் உதடுகளில் தடவவும். இதனை தினமும் செய்து வர விரைவில் உதடுகள் பளிச்சிடும்.

மென்மையான சருமம் பெற:
மாதுளை விதை எண்ணெய், ரோஸ்பெர்ரி விதை எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து ஒன்றாக கலக்க வேண்டும். உங்கள் கைகளில் 2-3 சொட்டு விட்டு நன்றாக கைகளை தேய்க்கவும். பின்பு உங்கள் விரல்களை கொண்டு உங்கள் சருமத்தில் நன்றாக மசாஜ் செய்யவும். சுருக்கங்கள் அல்லது கோடுகள் சருமத்தில் அல்லது முகத்தில் இருந்தால் மெல்ல மறையும் . இது வறண்ட சருமத்தை ஈரப்பதம் பெற செய்யும். க்லென்சிங் செய்த பிறகு அல்லது மேக்கப் களைத்த பிறகும் இதனை செய்யலாம். சருமம் மிகவும் மென்மையாகும்

சருமம் ஆரோக்கியம் பெற:
உங்கள் சருமத்தை மென்மையாக்க கற்றாழையை பயன்படுத்தலாம். கற்றாழை இலையை உடைத்து அதன் ஜெல்லை சருமத்தில் தடவலாம். சிறிது நேரத்திற்கு பின்பு குளிர்ந்த நீரில் கழுவுவதால் சருமம் புத்துணர்ச்சி அடையும். வாசகர்களே! அழகு குறிப்புகளை தெரிந்து கொண்டீர்களா? உடனே முயற்சித்து இன்றே உங்களை மேலும் அழகாக்குங்கள்!