குறைந்த விலையில் ‘வர்ணத்’ தேங்காய் இன்று முதல் மக்களுக்கு..

குறைந்த விலையில் ‘வர்ணத்’ தேங்காய் இன்று முதல் மக்களுக்கு..

அரசாங்கத்திடம் கைவசம் இருக்கின்ற ஒருதொகுதி தேங்காய்கள், சந்தைக்கு இன்று(02) விடப்படும். இதனூடாக, தேங்காய் ஒன்றை, 65 ரூபாய்க்கு, கொள்வனவு செய்ய முடியும் என தெங்கு உற்பத்தி சபை அறிவித்துள்ளது.

சிறு தெங்கு உற்பத்தியாளர்களிடமிருந்து ​​கொள்வனவு செய்யப்பட்ட தேங்காய்களே, இவ்வாறு சந்தைக்கு விடப்படவுள்ளன என தெங்கு உற்பத்திச் சபையின் தலைவர் கபில யகந்தாவல தெரிவித்தார்.

நடமாடும் வண்டிகளை கொண்டு, விற்பனை செய்யப்படும் குறித்த இந்த தேங்காய்கள், இனங்கண்டு கொள்ளக்கூடிய வகையில், வர்ணம் தீட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், ச​தொச விற்பனை நிலையங்களிலும், குறைந்த விலையில் தேங்காய்களை இன்று(02) முதல் கொள்வனவு செய்து கொள்ள முடியும். கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட வரட்சியான வானிலை காரணமாக, தெங்கு உற்பத்தி, பாதிப்படைந்திருந்தது. ஆகையால், நாட்டுக்குள் தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது என அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலேயே, கூடுதலான தாக்கத்தை இது செலுத்தியது. அதனடிப்படையில், தேங்காய் ஒன்று, 80 ரூபாய்க்கும் 100 ரூபாய்க்கும் இடையில் விற்பனை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

(rizmira)