கிழக்குப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு..

கிழக்குப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு..

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 1,2,3ஆம் ஆண்டு மாணவர்களின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும், இன்று(03) ஆரம்பமாவதாக, அப்பல்கலைக்கழகத்தின் பிரதி உப வேந்தர் வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன் தெரிவித்தார்.

இறுதியாண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக, கிழக்குப் பல்கலைக்கழகம், கடந்த செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், ஏனைய மாணவர்களுக்கு இன்று(03) ஆரம்பமாவதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் கடந்த 3 மாதங்களாக இடம்பெற்றுவந்த அசாதாரண சூழ்நிலை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து, மீண்டும் பல்கலைக்கழகம் அதன் முழுமையான கல்வி நடவடிக்கைகளுக்காகத் தற்போது திறக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)