பண்டிகைக் காலத்தில் குறைந்த விலையில் அரிசியை கொள்வனவு செய்ய நடவடிக்கை…

பண்டிகைக் காலத்தில் குறைந்த விலையில் அரிசியை கொள்வனவு செய்ய நடவடிக்கை…

எதிர்வரும் டிசம்பர் மாத பண்டிகைக் காலத்தில் எந்தவித குறைவுமின்றி குறைந்த விலையில் அரிசியை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு நுகர்வோருக்கு கிடைக்கும் என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆவது வாரத்தில் இந்தியாவிலிருந்து 53 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இலங்கையை வந்தடையும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், ஒரு கிலோ நாட்டரிசி 74 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.