இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த சீனா தீர்மானம்…

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த சீனா தீர்மானம்…

2018ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ௦2 பில்லியன் யுவான்களை இலங்கைக்கு உதவியாக வழங்க சீனா தீர்மானித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த சீனா விரும்புவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் லி சியாங் லியான் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பாடல் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் அவசியம் பற்றியும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.