கடற்பிரதேசங்களில் கடும் காற்று…

கடற்பிரதேசங்களில் கடும் காற்று…

நாட்டின் வடமேல் மற்றும் மேற்கு பகுதிகளில் நிலவும் வளிமண்டல குழப்ப நிலை காரணமாக காலி தொடக்கம் புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலான கடற்பிரதேசங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அந்த நிலையம் இன்று(31) வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடற்பிரதேசங்களில் மணிக்கு சுமார் 70 முதல் 80 கிலோ மீற்றர் வரை காற்று அதிகரித்து வீசக்கூடும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.