நிக் போத்தாஸ் இடமிருந்து இலங்கை அணியினருக்கு விசேட அறிவுறுத்தல்..
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களது பலம் மற்றும் கடமை தொடர்பில் மாத்திரம் அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கையின் இடைக்கால பயிற்றுவிப்பாளர் நிக் போத்தாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியாவில் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா சென்றுள்ளது.
இந்நிலையில், இலங்கை அணியின் வீரர்கள் மிகச் சிறந்த அணி ஒன்றுடனான போட்டியில் சவாலை வழங்க வேண்டியது முக்கியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.