சட்ட விரோதமாக 75 மில்லியன் பெறுமதியான சொத்துக்களை சேகரித்தமைக்கு எதிராக விமலுக்கு, குற்றப்பத்திரிகை தாக்கல்…

சட்ட விரோதமாக 75 மில்லியன் பெறுமதியான சொத்துக்களை சேகரித்தமைக்கு எதிராக விமலுக்கு, குற்றப்பத்திரிகை தாக்கல்…

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சட்ட விரோதமான முறையில் வருமானங்களும் சொத்துக்களும் ஈட்டியுள்ளமைக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டரீதியான வருமானத்தை தாண்டி சுமார் 75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சேகரித்துள்ளதாகவும், 39 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு குறித்த இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு ஜனவரி 01ம் திகதி முதல் 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வரையான காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சட்டரீதியான வருமானத்தை தாண்டி 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானங்களும் சொத்துக்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

வருமானங்கள் மற்றும் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தண்டனைக்குறிய குற்றம் என்பதுடன், விமல் வீரவன்சவுக்கு எதிராக 32 சாட்சியாளர்களும் 93 சாட்சிப் பொருட்களும் பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

####..