ஐக்கிய நாடுகள் சபை செயற்குழுவின் மூவர் அடங்கிய குழு இலங்கை விஜயம்…

ஐக்கிய நாடுகள் சபை செயற்குழுவின் மூவர் அடங்கிய குழு இலங்கை விஜயம்…

சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படுவதற்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபை செயற்குழுவின் மூவர் அடங்கிய குழு ஒன்று இலங்கை வரவுள்ளது.

டிசம்பர் மாதம் 4ம் திகதி முதல் 15ம் திகதி வரையில் இந்த குழு இலங்கையில் தங்கி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழு இலங்கையில் உள்ள சிறைச்சாலை, பொலிஸ் நிலையங்கள், அகதிகள் முகாம் போன்ற மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்..

அதேவேளை, கொழும்பிலும், வடமத்திய, வடக்கு கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பல்வேறு சந்திப்புகளை நடத்தவுள்ளனர். தங்களது ஆய்வு குறித்து அவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ம் திகதி விசேட செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி விளக்கமளிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.