மைத்திரி வழியில் செல்லும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி

மைத்திரி வழியில் செல்லும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த அனுபவத்தை கொண்டு இம்முறை பொதுத் தேர்தலில் முகம் கொடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி குறிப்பிட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்திய முறையை கொண்டு இம்முறை பொதுத் தேர்தலில் கூட்டணி போட்டியிடும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தினுள் நாட்டை சீரழிக்கும் கதாபாத்திரங்கள் காணப்பட்டமையே அவரது தோல்விக்கு காரணமாகியுள்ளதாக அவர் மேலும் சுடிக்காட்டியிருந்தார்.

(riz)