பேச்சுவார்த்தை தோல்வி – தபால் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு  ஆயத்தம்.

பேச்சுவார்த்தை தோல்வி – தபால் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு ஆயத்தம்.

தபால் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் தபால் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்கங்களதும் தலைவர்கள் மற்றும் தபால் மற்றும் முஸ்லிம் மத விவகாரங்கள் அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் (27) நடைபெற்ற பேச்சுவார்த்தை தீர்வுகள் எதுவுமின்றி நிறைவுக்கு வந்தமையால் திட்டமிட்டபடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அதன்படி வேலை நிறுத்தத்தினை கைவிட வேண்டுமாயின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை ஒன்று எதிர்வரும் 48 மணி நேரத்தினுள் தமக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் குறித்த ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்தும் வேலை நிறுத்தத்தினை முன்னெடுத்தால் தபால் சேவை மட்டுமின்றி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்கு அட்டைகள் வழங்கும் நடவடிக்கைகளும் முடங்கும் என மேலும் குறித்த ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

#reeshmaa