நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை…

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை…

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா , மத்திய , சப்ரகமுவ மாகாணங்களிலும் அம்பாறை , மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் , தென் மற்றும் மேல் மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நுவரெலியா – ராகலை – ரத்நாயகபதன மற்றும் லீட்ரேவத்த பிரதேசத்தில் பெய்த கடும் மழை காரணமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.