ஒருமித்த எண்ணத்துடன் விளையாடியிருந்தால் இந்திய அணியை எளிதில் வென்றிருப்போம்…
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியின் வெற்றியினையும் கேப் டவுனில் நேற்று(07) இந்தியா அணி கொண்டாடியது.
ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது போட்டியில் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் தென்னாபிரிக்க அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்திருந்த நிலையில் குறித்த போட்டியும் தோல்வியிலேயே நிறைவடைந்துள்ளது.
இரண்டு போட்டியினையும் இந்தியா வென்றபோது, தென்னாபிரிக்க பந்து வீச்சாளர் ரபடா தோல்வி குறித்து கூறுகையில்,
“..எங்கள் அணியில் அனைவரும் ஒருமித்த எண்ணத்துடன் விளையாடியிருந்தால் இந்திய அணியை எளிதில் வென்றிருப்போம். இது அனைவருக்கும் பொருந்தாது. இந்தியா போன்ற ஒரு தலை சிறந்த கிரிக்கெட் அணியை வீழ்த்த எங்கள் அணியில் ஒற்றுமைத் தேவை.
நாங்கள் வெற்றி பெறும் போது, யாரும் எப்படி வெற்றி பெற்றோம் என விடை தேடுவதில்லை. ஆனால் தோல்வியடைந்தால் பல கேள்விகளை எழுப்புகின்றனர். அது பல எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் இந்தியாவிடம் ஒரு வெற்றியுடன் கூடிய திருப்பத்தை பெற முயற்சி செய்தோம்..” என உருக்கத்துடன் ரபடா கூறியுள்ளார்.
#rishma