பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஜேவிபி ஆதரவு…!!!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டால் அதற்கு கட்சி சார்பில் ஆதரவு வழங்க மக்கள் விடுதலை முன்னணி தயார் என கட்சியின் உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டார நேற்று(26) ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றினைக் கொண்டுவர ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களது குழுவொன்று ஆயத்தமாகி வருவதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#rishma