லஹிறு மற்றும் சுகனானந்த தேரருக்கு பிணை…

லஹிறு மற்றும் சுகனானந்த தேரருக்கு பிணை…

நீதிமன்ற உத்தரவினை புறக்கணித்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர மற்றும் பிக்குகளது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் தெம்பிட்டியே சுகனானந்த தேரர் ஆகியோருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

இன்று(28) கொழும்பு – கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்த குறித்த வழக்கில் இருவருக்கும் தலா 3 இலட்சம் ரூபா சரீரப் பிணையும், 7,500 ரூபா பிணையிலும் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 

#rishma