குளவி தாக்கியதில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி…

குளவி தாக்கியதில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி…

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட கீழ் பிரிவு தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 10 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் இன்று(28) அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் 08 பெண் தொழிலாளர்களும் 02 ஆண் தொழிலாளர்களும் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எல்பட 15 ஏ மலையில் இருந்த குளவி கூடு கலைந்தன் காரணமாகவே குறித்த இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

#rishma