ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்பது குறித்து குசல் ஜனித்தின் தீர்மானம் இதோ…

ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்பது குறித்து குசல் ஜனித்தின் தீர்மானம் இதோ…

2018 – இந்திய பிரிமியர் லீக் போட்டியில் இருந்து டேவிட் வோர்னர் நீக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சன்ரைஸஸ் ஹைதரபாத் அணியில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படிருந்தது.

எனினும், நாட்டிற்கு முன்னுரிமை வழங்கி இம்முறை ஐபிஎல் போட்டிகளில் குசல் ஜனித் பெரேரா கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அது இன்று(30) மாகாண மட்ட கிரிக்கெட் போட்டித் தொடர் இலங்கையில் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் , இதில் குசல் ஜனித் பெரேரா குறித்த போட்டியில் கலந்து கொள்ளவுள்ளமையால் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.