பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஸ்ரீ.சு.கட்சி தீர்மானம்…

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஸ்ரீ.சு.கட்சி தீர்மானம்…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு 48 மணி நேரங்களுக்கு முன்னர் தீர்மானிக்கப்படும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கட்சியின் நாடாளுமன்றக் குழுவினர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதன் போது நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.