நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க சுதந்திரக் கட்சிக்கு முடியாது – லக்ஷமன் யாபா…

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க சுதந்திரக் கட்சிக்கு முடியாது – லக்ஷமன் யாபா…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க முடியாது உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இராஜங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா தெரிவித்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ள விடயங்களை எதிர்க்க முடியாதுள்ளதால் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அவர் இது குறித்து இன்று(30) ஸ்ரீ லங்கா கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

 

Rishma