புனித விசாகப் பூரணை நோன்மதித் தினம் இன்று…

புனித விசாகப் பூரணை நோன்மதித் தினம் இன்று…

‘மனிதன் உயர்வதும் தாழ்வதும் பிறப்பால் அன்றி அவனது செயலாலேயே ஆகும்’ என்பதே புத்தர் அருளிய போதனையின் அடிநாதமாகும். இந்த புனிதமான விசாக தின வைபவத்தில் புத்த பெருமான் அருளினால் உலக வாழ் பௌத்த மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்ப பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும், சமூகத்தின் நலனை அடிப்படையாகக் கொண்டு பௌத்த தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும் என தமது வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வாழ்த்துச் செய்தியில், புத்தபிரான் காலடி எடுத்துவைத்த இந்தப் பூமியில் யுத்த மோதல்கள் மற்றும் துயர்கள் அற்ற வகையில், அனைத்து இன சமூகங்களுக்கும் சமமான உரிமைகள் மற்றும் நீதி நியாயம் என்பன கிடைக்கப் பெறுகின்ற நிலையான சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு அனைவரும் அணி திரள வேண்டும்.

சமாதானம் மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய சகவாழ்வின் ஒளியின் ஊடாக புனித விசாக தினத்தில் தேசத்தை மெருகூட்டுவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

####