மே 1ஆம் திகதி கொண்டாட்டங்களுக்கு பொலிஸ் தடை எதுவும் இல்லை…

மே 1ஆம் திகதி கொண்டாட்டங்களுக்கு பொலிஸ் தடை எதுவும் இல்லை…

மே 1ஆம் திகதி தொழிலாளர் தினக் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது சட்டரீதியாகத் தடை செய்யப்படாத நிலையில், அன்று நடைபெறும் கூட்டங்களுக்கு பொலிஸாரால் எந்தவித இடையூறுகளும் ஏற்படுத்தப்பட மாட்டாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

எனினும், மே மாதம் முதலாம் திகதி வெசாக் தின நிகழ்வுகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், வீதிகளில் போக்குவரத்துத் தடை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பௌத்தர்களின் புனித நாளும் மே தினமும் ஒரே நாளில் வருவதால் மே தின நிகழ்வுகளை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு மாற்றுமாறு அரசிடம் மகாநாயக்க தேரர்கள் விடுத்த கோரிக்கை ஏற்ப, எதிர்வரும் 7ஆம் திகதி மே தினக் கொண்டாட்டங்களை நடத்த அரசு முடிவெடுத்துள்ள நிலையில், சில கட்சிகள் மே தின நிகழ்வுகளை மே முதலாம் திகதியே நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Rishma