இன்று(23) நள்ளிரவு முதல் புகையிரத சேவையின் 03ஆம் தர பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்…

இன்று(23) நள்ளிரவு முதல் புகையிரத சேவையின் 03ஆம் தர பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்…

கோரிக்கைகள் மூன்றினை முன்வைத்து, புகையிரத சேவையின் 03ஆம் தர பணியாளர்கள் இன்று(23) நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக, புகையிரத நிலைய சமிஞ்ஞையாளர்கள் சங்கத்தின் தலைவர் டபிள்யு.ஜீ.வை.எஸ். ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

குறித்த பணிப்புறக்கணிப்பினை புகையிரத நிலையை சமிஞ்ஞையாளர்கள், புகையிரத பயண அனுமதிப்பத்திர சேகரிப்பாளர்கள் மற்றும் பொருட்கள் பரிசோதகர்கள் ஆகியோர் இணைந்து மேற்கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சம்பளப் பிரச்சினை, வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளாமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma