வீதி விபத்தில் பெண்ணொருவர் பலி…

வீதி விபத்தில் பெண்ணொருவர் பலி…

கொழும்பு – ஆமர் வீதியில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்று (31) காலை கடவத்தை – கோட்டை நோக்கிச் செல்லும் தனியார் பேரூந்து ஒன்றுடன் ​மோதுண்டதிலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனர் இருவரையும் கைது செய்துள்ளதோடு, இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கொட்டஞ்சேனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.