மாத்தறையில் கொள்ளை அடிக்கப்பட்ட தங்க நகைகள் மீட்பு…

மாத்தறையில் கொள்ளை அடிக்கப்பட்ட தங்க நகைகள் மீட்பு…

மாத்தறை ஆபரண விற்பனை நிலையத்தில் கொள்ளை அடிக்கப்பட்ட 75 தங்க மாலைகள் மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த மாலைகளின் பெறுமதி 60 லட்சத்திற்கும் அதிகம் என பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொள்ளையில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவரான ஹபரகட வசந்த என்பவரின் மனைவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்றைய தினம்(29) இந்த ஆபரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.