சிறுமி கொலை தொடர்பில் மேலும் இருவர் கைது…

சிறுமி கொலை தொடர்பில் மேலும் இருவர் கைது…

யாழ். சுழிபுரம் பகுதியில் ரெஜினா என்ற சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று(29) மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை இன்று(30) மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.