கட்சிக்கு மைத்திரியை விட சிறந்த தலைவர் தேவை – திஸ்ஸ

கட்சிக்கு மைத்திரியை விட சிறந்த தலைவர் தேவை – திஸ்ஸ

மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சிறந்த தலைவர் ஒருவர் தேவை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வழிநடத்த புதிய தலைவர் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பான நிலைப்பாடு அவரது நேற்றைய உரையில் தெளிவானதாக கூறியுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டியூ. குணசேகர அங்கு வந்திருந்த போதிலும் ஊடகங்களிடம் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

(riz)