தேரர்கள் நால்வருக்கு நீதிமன்றம் பிடியாணை…

தேரர்கள் நால்வருக்கு நீதிமன்றம் பிடியாணை…

அரச பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், சங்கைக்குரிய பெங்கமுவெ நாளக தேரர், மாகல்கந்தே சுதத்த தேரர், இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மற்றும் மெடில்லே பன்யலோக தேரர் ஆகியோருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் போராட்டத்தின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியது சம்பந்தமான வழக்கில் குறித்த தேரர்கள் சந்தேக நபர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.