ஊவா மாகாண தாதியர்கள் மற்றும் மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு தயார்..
மேலதிக கொடுப்பனவு வழங்காமை, போக்குவரத்து கொடுப்பனவு வழங்காமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து, ஊவா மாகாண சுகாதார திணைக்களத்தில் பணியாற்றும் மருத்துவ உதவியாளர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் ஆகியோர், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
இதற்கமைய, இவர்கள் எதிர்வரும் 04 ஆம் திகதி, பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனரென, ஊவா மாகாண மருத்துவ உதவியாளர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.