மேன் பவர் பணியாளர்களது ஆர்ப்பாட்டத்தினால் விமான நிலைய நடவடிக்கைகளில் இடையூறு..

மேன் பவர் பணியாளர்களது ஆர்ப்பாட்டத்தினால் விமான நிலைய நடவடிக்கைகளில் இடையூறு..

கட்டுநாயக்க விமான நிலையத்தின் மேன் பவர் பணியாளர்கள் சிலர் இன்று(31) காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையினால் விமான நிலைய நடவடிக்கைகளில் இடையூறு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பள பிரச்சினையை முன்னிறுத்தி அவர்கள் விமான நிலையத்திற்கு அருகில் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.