கப்பலுடன் படகு விபத்து – உயிரிழந்த மீனவர்களுக்கு இழப்பீடு…

கப்பலுடன் படகு விபத்து – உயிரிழந்த மீனவர்களுக்கு இழப்பீடு…

பேருவளையிலிருந்து கடலுக்கு சென்ற படகொன்று கப்பலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் உயிரிழந்த 4 மீனவர்களுக்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, உயிரிழந்த மீனவர்களுக்கு தலா 1 மில்லியன் ரூபா பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரசன்ன கினிகே தெரிவித்துள்ளார்.

மீனவப்படகுடன் மோதிய கப்பல் தொடர்பில் இலங்கை கடற்படை ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் கூறியுள்ளது.

விபத்து இடம்பெற்ற நேரம் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், விபத்துடன் தொடர்புடைய கப்பலை அடையாளங்காண்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.