இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…

இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…

காலி – கொழும்பு பிரதான வீதியின் வதுரேகம பிரதேசத்தில் இன்று(15) அதிகாலை இடம்பெற்ற ஜீப் வாகன விபத்தில் 36 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

சாரதிக்கு வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையினால் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி பின்னர் அருகில் இருந்து தடுப்புச்சுவரில் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் , விபத்தில் படுகாயமடைந்த சாரதி பலபிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.