இ.போ.ச. ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது…

இ.போ.ச. ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது…

இ.போ.ச. பேரூந்தின் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வட மாகாணத்தின் சில பகுதிகளில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தின் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில், குறித்த தனியார் பேரூந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதையடுத்து, இந்தப் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் நேற்ற (17) இரவு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.