மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்…

மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்…

மழையுடனான காலநிலை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் ஒக்டோபர் 1 முதல் 3 வரை தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டில் குறிப்பாக வடமத்திய மத்திய சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் காணப்படும் மழையுடனான வானிலை நிலைமை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது மாலையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, ஊவா சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் கரையோரப் பிரதேசங்களில் பல இடங்களில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.