நாளை(01) முதல் புகையிரத கட்டணங்கள் அதிகரிப்பு…

நாளை(01) முதல் புகையிரத கட்டணங்கள் அதிகரிப்பு…

நாளை(01) முதல் புகையிரத கட்டணங்கள் 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன.

இதேவேளை, குறைந்தபட்ச கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என புகையிரத திணைக்களம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.

இதன்படி, மூன்றாம் வகுப்பிற்கான குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாவாக காணப்படுவதுடன், இரண்டாம் வகுப்பிற்கான குறைந்தபட்ச கட்டணமான 40 ரூபாவிலும் எவ்வித மாற்றமும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புகையிரத பருவச்சீட்டு கட்டணமும் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.