அக்குறனைப் பகுதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை….
தொடர்ச்சியான அடை மழை காரணமாக கண்டியை அண்மித்த அக்குறனை நகரம் முழுமையாக வௌ்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் சிரமதானப் பணிகள் நடைபெற்று வருவதால் குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவி வருகின்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக மாத்தளை நோக்கிப் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.