இரத்தினபுரி-எம்பிலிப்பிட்டி பிரதான வீதியில் ஒரு பகுதி தாழிறக்கம்…

இரத்தினபுரி-எம்பிலிப்பிட்டி பிரதான வீதியில் ஒரு பகுதி தாழிறக்கம்…

இரத்தினபுரி-எம்பிலிப்பிட்டி பிரதான வீதியின், திரிவானகெட்டிய பகுதியில் வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக, வீதி இவ்வாறு தாழிறங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த வீதியின் ஒரு பகுதியில் மாத்திரமே பயணம் செய்ய முடிந்துள்ளதாகவும், வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.