பாறை சரிவு அனர்த்தம் – 43 குடும்பங்கள் வெளியேற்றம்…

பாறை சரிவு அனர்த்தம் – 43 குடும்பங்கள் வெளியேற்றம்…

பதுளை – பெரகல கிராம உத்தியோகத்தர் பிரிவில் பத்கொட என்ற இடத்தில் நேற்றிரவு(04) பெய்த கடும் மழை காரணமாக, பாறை சரிவு அனர்த்தம் அதிகரித்துள்ளமையினால் 43 குடும்பங்களை சேர்ந்த 150 பேர் இப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வெளியேற்றப்பட்டவர்கள் தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைத்திருப்பதாக இடர் முகாமைத்துவ பதுளை மாவட்ட உதவி பணிப்பாளர் E.L .M . உதய குமார தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டத்தில் அல்தமுள்ள பிரதேச செயலாளர் பிரிவில் பல இடங்களில் 100 மீட்டருக்கும் மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் பாறை சரிவு அனர்த்தம் இருப்பதாக இடர் முகாமைத்துவ பதுளை மாவட்ட உதவி பணிப்பாளர் E.L .M . உதய குமார தெரிவித்தார்.

கட்டிட ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர் இந்த பிரதேசத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிவைக்கப்படவுள்ளதாக இடர் முகாமைத்துவ பதுளை மாவட்ட உதவி பணிப்பாளர் தெரிவித்தார்.