ரத்தொலுகம துப்பாக்கிச்சூடு – இரண்டு பேர் கைது…

ரத்தொலுகம துப்பாக்கிச்சூடு – இரண்டு பேர் கைது…

கடந்த 7ம் திகதி ரத்தொலுகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் நேற்று(10) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெலியகொடை குற்றவியல் பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவர்களிடம் இருந்து வௌிநாட்டில் தயாரிக்கபட்ட கைத்துப்பாக்கியொன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளதக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சந்தேகநபர்கள் இன்று(11) நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் ரத்தொலுகம கல்லவத்த பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய நபரொருவர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.