கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது…

கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது…

யாழ்பாணத்திலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் நான்கு கிலோகிராம் கேரள கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பேரூந்தை வழிமறித்த பொலிசார் குறித்த நபரை கஞ்சாவுடன் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் ரம்பாவையை சேர்ந்த இளைஞன் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவரையும் சான்றுப் பொருட்களையும் இன்று(19) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த இருப்பதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.