பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்திருந்த பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘பண்டா’ உயிரிழப்பு…
பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாதாள உலக குழு உறுப்பினரான ஹசித எனப்படும் ‘பண்டா’ என்பவர் நேற்று(18) மாலை உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் கடந்த 4 ஆம் திகதி அதுருகிரிய, ஒருவெல பகுதியில் இடம்பெற்ற பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்திருந்தார்.
குறித்த நபர், மாகந்துரே மதூஷ் மற்றும் அங்கொட லொக்க ஆகிய பாதாள உலக குழு தலைவர்களுடன் மிக நெருக்கமானவர் என தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.