தடை செய்யப்பட்டுள்ள நீர் விநியோகம் வழமைக்கு….

தடை செய்யப்பட்டுள்ள நீர் விநியோகம் வழமைக்கு….

அம்பத்தலையில் இருந்து ஜூபிலி நீர் தடாகத்திற்கு நீரை விநியோகிக்கும் குழாயில் அவசர மறுசீரமமைப்பு நடவடிக்கை காரணமாக நேற்று(19) பிற்பகல்12.00 மணி முதல் இன்று(20) அதிகாலை 5.00 மணி வரை நீர் விநியோகம் தடை செய்யப்பட்டிருந்தது.

இன்று(20) அதிகாலை 5.00 மணியளவில் குறித்த பிரதேசங்களுக்கான நீரை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தேசிய நீர்வழங்கல் வடிலாமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

எனினும் கோட்டை மாநகர சபை அதிகார பிரதேசங்களுடன், கொழும்பு 06 பகுதியிலும் இன்று பிற்பகல் அளவில் நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும் என நீர்வழங்கல் வடிலாமைப்புச் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.