நாலக்க டி சில்வா இன்று(23) நான்காவது நாளாகவும் சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டுள்ளார்…

நாலக்க டி சில்வா இன்று(23) நான்காவது நாளாகவும் சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டுள்ளார்…

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா இன்று(23) நான்காவது நாளாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

நேற்று(22) பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வாவிடம் 09 மணித்தியாலங்கள் விசாரணைகள் நடத்தப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் மீதான கொலை முயற்சி சதி திட்டம் தொடர்பில் நாலக டி சில்வாவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.