பட்டாசுகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை இல்லை – உச்ச நீதிமன்றம்…

பட்டாசுகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை இல்லை – உச்ச நீதிமன்றம்…

நாடு முழுவதும் பட்டாசுகள் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை இல்லை என உச்ச நீதிமன்றம் இன்று(23) தீர்ப்பளித்துள்ளது.

நாடு முழுவதும் பட்டாசுகளை உற்பத்தி செய்யவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தனர். விசாரணையின்போது தங்கள் கருத்துக்களையும் தெரிவித்தனர். விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதேவேளை, பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு சில கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை விதிக்கப்பட்டுள்ளதுடன், குறிப்பாக ஆன்லைன் மூலம் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது எனவும் மாசு குறைவாக இருக்கும் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.