பிரதான பாதையிலான புகையிரத சேவைகளில் தாமதம்…

பிரதான பாதையிலான புகையிரத சேவைகளில் தாமதம்…

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி இன்று(29) அதிகாலை பயணித்த புகையிரதம் ஒன்று கடிகமுவ பகுதியில் தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த புகையிரதத்தை வேறு ஒரு இயந்திரத்துடன் பொருத்தி பயணிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை குறிப்பிட்டுள்ளது.