சிகாகோ மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் உயிரிழப்பு…

சிகாகோ மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் உயிரிழப்பு…

சிகாகோவில் உள்ள மருத்துவமனையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு பெண் ஊழியர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், ஒரு பெண்ணை குறிவைத்தே தாக்குதலை நடத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. அந்த பெண்ணுக்கும் அவருக்கும் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. ஆனால் கொலைக்கான காரணம் தெரியவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.