எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி சாதாரணதரப் பரீட்சை ஆரம்பம்…

எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி சாதாரணதரப் பரீட்சை ஆரம்பம்…

2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

4 ஆயிரத்து 661 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ள இந்தப் பரீட்சையில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 850 பாடசாலை பரீட்சார்த்திகள் பங்கேற்க உள்ளனர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2 லட்சத்து 33 ஆயிரத்து 791 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் சாதாரணதரப் பரீட்சையில் பங்கேற்க உள்ளனர்.

இதேவேளை, ரத்மலானை, தங்காலை, மாத்தறை, சிலாபம், கொழும்பு மற்றும் மகஸின் சிறைச்சாலை என்பனவற்றில் விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.