நாமல் குமாரவின் கைப்பேசி ஹொங்கொங் நாட்டிற்கு… விசாரணைகள் தீவிரம்..

நாமல் குமாரவின் கைப்பேசி ஹொங்கொங் நாட்டிற்கு… விசாரணைகள் தீவிரம்..

ஜனாதிபதி கொலைச் சதி தொடர்பில் வெளிப்படுத்திய ஊழல் எதிர்ப்பு அமைப்பின் ஏற்பாட்டாளர் நாமல் குமாரவின் கையடக்க தொலைபேசியினை ஹொங்கொங் நாட்டில் உள்ள குறித்த தொலைபேசி நிறுவனத்திற்கு அனுப்ப தீர்மானித்துள்ளது.

நாமல் குமாரவினால் முன்வைக்கப்பட்டுள்ள ஒலிப் பதிவு சில அழிந்துள்ள நிலையில் அவற்றினை மீளவும் ஆய்வு செய்ய எதிர்வரும் வாரத்தினுள் குறித்த தொலைபேசி நிறுவனத்திற்கு எடுத்து செல்லவுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று(05) கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியிருந்தனர்.