சிகரட் தொகைகளுடன் சீன பிரஜைகள் மூன்று பேர் கைது…

சிகரட் தொகைகளுடன் சீன பிரஜைகள் மூன்று பேர் கைது…

சுமார் 34 இலட்சத்து 98 ஆயிரம் ருபாய் பெறுமதியுடைய சிகரட் தொகையை இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வந்த சீன பிரஜைகள் மூன்று பேர் நேற்று(06) கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கைது செய்யப்பட்டவர்களின் பயணப்பொதியினுள் 63 ஆயிரத்து 600 சிகரட்டுகள் அடங்கிய 318 பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கம் தெரிவித்துள்ளது.